மரண அறிவித்தல்: திருமதி காசிநாதன் நாகம்மா
திருமதி காசிநாதன் நாகம்மா
வயது 80
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்), கோப்பாய், Sri Lanka
தோற்றம் 19 APR 1944***மறைவு 08 JUN 2024


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதன் நாகம்மா அவர்கள் 08-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

திருஞானசம்பந்தர், சந்திரசேகரம், காலஞ்சென்ற சிவசுந்தரம் ஆகியோரின் சகோதரியும்,

செல்வராணி, தவமலர், ஜெகதீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

பிரதீபன்(பிரான்ஸ்), குமுதினி(நோர்வே), மகிழினி(யா/உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணரஞ்சினி(பிரான்ஸ்), ராஜ்குமார்(நோர்வே), மோகனராசன்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- பிரதி பிரதம செயலாளர் திட்டமிடல் அலுவலகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஞ்சனா(பிரான்ஸ்), அக்ஷனா(நோர்வே), சாறுக்(நோர்வே), திவ்வியகரன்(களனிப் பல்கலைக்கழகம்), சாம்பவி (இராஜரட்டைப் பல்கலைக்கழகம்), காருண்யா(யா/வேம்படி மகளிர் மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் கோப்பாயில் உள்ள அவரின் மகளின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நீர்வேலி சியாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:-
MPCS Lane,
கோப்பாய் வடக்கு,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

Posted on 11 Jun 2024 by Neervely Admin1
Content Management Powered by CuteNews