1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் நடராஜா தியாகராஜா (நேவியர்)
அமரர் நடராஜா தியாகராஜா (நேவியர்)
முன்னாள் கடற்படை உத்தியோகத்தர் -இலங்கை கடற்படை,முன்னாள் பேச்சாளர்-பேர்லின் இந்து மகா சபை இ.வி.
வயது 75
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) பேர்லின், Germany
தோற்றம் 29 MAY 1946 *** மறைவு 13 APR 2022

யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்

மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா என்று
உணர்கின்றோம்...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்

உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....!!!    

தகவல்: குடும்பத்தினர்

Posted on 04 Apr 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews