யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை தங்கராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதையா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
வாழ்க்கை என்பது இறைவன்
வகுத்த வரைதானே!
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
எம் உள்ளத்தின் உள்ளே வளரும்
ஒரு உன்னதமான மனித தெய்வம்
நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும் பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம் ஐயா!
உங்கள் உடல் மட்டும் தான்
அழிந்தது தந்தையே! நீங்கள்
எங்களை பிரிந்தாலும் எங்கள் ஒவ்வொரு
அசைவிலும் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
தகவல்: குடும்பத்தினர்