1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம் (பப்பா)
அமரர் இளையதம்பி இரத்தினசிங்கம் (பப்பா)
ஆச்சாரியார்
வயது 82
கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி, Sri Lanka
பிறப்பு 28 DEC 1938***இறப்பு 28 SEP 2021

யாழ். கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு
அணையாத தீபத்தைப்போல்
உங்கள் நினைவலைகள் கலந்த
நெஞ்சோடு வாழ்கின்றோம்!

இன்னொரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீங்களே எங்கள்
வீட்டின் ஆலமரமாகவும் அதில்
நாங்கள் விழுதுகளாகவும் வர
ஆண்டவனை வேண்டுகிறோம்!

எம் உயிருக்கும் மேலானவரே
உம் நினைவோடு நீர் மறைந்து
போன பின்பும் உம் நினைவு
சுமந்த நெஞ்சமெல்லாம் கண்ணீராய்
கரைந்து பேராறாய் பெருகுதய்யா மடை திறந்து!

உம் பாசப்பிணைப்பினால்
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய்
வேண்டுகின்றோம்!!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!

16-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இலல்லத்தில் நடைபெறவிருக்கும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Posted on 29 Sep 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews