4ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லையா சுப்பிரமணியம்
அமரர் செல்லையா சுப்பிரமணியம்
C.T.B மணியண்ணை- ராஜ்மணி பந்தல் சேவை
வயது 73
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada
பிறப்பு 15 MAY 1944***இறப்பு 12 FEB 2018

யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா சுப்பிரமணியம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-03-2022

அனுதினமும் அகம் விட்டகலா
 நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் நான்கு அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்

ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள்
 நீங்காது எங்களுக்கு பெருமை சேர்த்த
 எம் அப்பாவே...
உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!

இன்று நீங்கள் எம்மோடு இல்லை
ஆனாலும் நீங்கள் காட்டிய பாதையில்தான்
பயணிக்கின்றோம் அப்பா!
 மண்ணோடு மறையும் காலம் வரை
எம் நெஞ்சோடு இருக்கும்
உங்கள் நினைவுகளுடன்
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....

ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Posted on 14 Mar 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews