1ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் இராமதாசன் சிற்றம்பலவனார் (Paris பார்த்தீபன், கண்ணன்)
அமரர் இராமதாசன் சிற்றம்பலவனார் (Paris பார்த்தீபன், கண்ணன்)
முன்னாள் மக்கள் வங்கி பொறுப்பாளர் (Banker)
வயது 70
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) மானிப்பாய், Sri Lanka London, United Kingdom
பிறப்பு 22 JAN 1950***இறப்பு 21 JAN 2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராமதாசன் சிற்றம்பலவனார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்பு உறவே அப்பா!
எங்கு தேடுவோம் உமை அப்பா!
 கண்ணைக் காக்கும் இமை போல
 எம்மைக் காத்த எம் அப்பா!

ஓராண்டு ஓடிற்றோ?
 உமை இவ்வுலகில் நாமிழந்து
வையத்தை விட்டு நீர் நீங்கிப் போனாலும்
நீங்காமல் உம் நினைவு
எம்மோடு நிறைந்திருக்கும்

தேடிக் களைத்து விட்டேன் உங்களை
ஏங்கும் முன் தாங்கி நின்றீர்கள்
 கேட்கும் முன் கொடுத்தீர்கள்
வாழ்வின் வழியைக் காட்டினீர்கள்

எல்லாவற்றின் மதிப்பையும்
அன்பால் சொன்னீர்கள்
துக்கமோ, சுகமோ உங்கள் அரவணைப்புக்காக
ஏங்குகின்றேன்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்


Posted on 23 Jan 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews