5ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் செல்லத்துரை துரைசிங்கம் (J.p)

அமரர் செல்லத்துரை துரைசிங்கம் (J.p)
ஓய்வுப்பெற்ற ஆசிரியர் நீர்வேலி றோ.க.த.க.பாடசாலை, மீனாட்சி அம்மன் ஆலய முன்னாள் தர்மகர்த்தா, தலைவர் மற்றும் போசகர், சாரதா சனசமூக நிலைய ஸ்தாபகர்-சங்கத்தானை, பரம்பன்கிராய் தமிழ் கலவன் பாடசாலை ஸ்தாபகர்- பூநகரி
வயது 80
சாவகச்சேரி, Sri Lanka (பிறந்த இடம்) நீர்வேலி வடக்கு, Sri Lanka
பிறப்பு 19 APR 1936***இறப்பு 26 DEC 2016

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை துரைசிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
 ஐந்து ஆண்டு ஆனாலும் அப்பா
 ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்

எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அப்பா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
 உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
 என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் அப்பா!

பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
 எல்லாமே உன் அன்பு மட்டுமே !

ஐந்து ஆண்டு என்ன பத்தாயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்


Posted on 31 Dec 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews