மரண அறிவித்தல்: திருமதி கோபாலசிங்கம் நாகேஸ்வரி (தேன்)


திருமதி கோபாலசிங்கம் நாகேஸ்வரி (தேன்)
தோற்றம் : 20 பெப்ரவரி 1949 - மறைவு : 11 யூலை 2018



யாழ். கோப்பாய் தெற்கு அழகியவான் தோட்டம் இருபாலையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் நாகேஸ்வரி அவர்கள் 11-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கோபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

பாலேஸ்வரன்(வவா- வதிரி), பாலேந்திரன்(றமேஸ்- கொழும்பு), பாலச்சந்திரன்(சுபாஸ்- கனடா), பாலசுதன்(சுதா- அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சந்திரமலர், செந்திலரசி, தமிழினி, சர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பானுஜா, அக்சயா, தர்வேஷன், ஜானுஜா, நிலக்‌ஷன், நிகிலன், நியாஷன், சஜித், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் எற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
நீர்வேலி தெற்கு,
நீர்வேலி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
- இலங்கை
தொலைபேசி: +94212231527

Posted on 16 Jul 2018 by Admin
Content Management Powered by CuteNews