யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பர் சின்னத்தம்பி பிறைசூடி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான அப்பா!
உங்கள் முகம் காண ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
ஆண்டுகள் ஆனாலும் உங்கள் ஆசைமுகம் எங்களை விட்டு பிரியாது
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா ஒருதடவை உங்கள் குரலை காட்டமாட்டீர்களோ அப்பா! எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொள்ளும் எம் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்: குடும்பத்தினர்