31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்: திருமதி தவமலர் பத்மநாதன்

திருமதி தவமலர் பத்மநாதன்
வயது 82
உரும்பிராய், Sri Lanka (பிறந்த இடம்), நீர்வேலி, Sri Lanka, Chur, Switzerland, Bern, Switzerland
தோற்றம் 16 JAN 1943***மறைவு 01 JUN 2025


யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும், சுவிஸ் Chur Bern ஆகிய இடங்களை தற்போதைய வசிப்பிடமாவும் கொண்ட பத்மநாதன் தவமலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Hotel Marsol Susswinkelgasse 15 700 chur, Graubunden எனும் முகவரியில் நடைபெறும். அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 29 Jun 2025 by Neervely Admin1
Content Management Powered by CuteNews