ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசன நிகழ்வும்: அமரர் சிவலிங்கம் கதிர்காமத்தம்பி



அமரர் சிவலிங்கம் கதிர்காமத்தம்பி



29.02.2012 கனடாவில் அமரத்துவம் அடைந்த சிவலிங்கம் கதிர்காமத்தம்பியின் 31ஆம் நாள் நினைவுதினம் 30.03.2012 வெள்ளிக்கிழமை அன்று நீர்வை கந்தன் ஆலயத்தில் முற்பகல் 11 மணிக்கு அவரது நினைவாக பூஜை வழிபாடு பிரார்த்தனை, மகேஸ்வர பூசை இடம்பெறும். அன்றைய தினம் நீர்வை மக்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய நீர்வைக் கந்தனை பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி!

தகவல் : தம்பிமுத்து சோதிலிங்கம் (J.P) (மாமனார்).

தொடர்புகளுக்கு
தம்பிமுத்து சோதிலிங்கம் (J.P) (மாமனார்). - கந்தன் கருணை, நீர்வை தெற்கு, நீர்வேலி. ,

Posted on 29 Mar 2012 by Admin
Content Management Powered by CuteNews