வாழையடி வாழை 2011 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது
வாழையடி வாழை 2011 நிகழ்வு கோலாகலமாக சென்ற சனிகிழமையன்று நிறைவேறியது. பிரதம விருந்தினராக கனடிய பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய செல்வி ராதிகா சிற்சபைஈசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். திரு ஆ. மு. ஈழவேந்தன் அவர்கள் வாழையடி வாழை 5ம் மலரை வெளியிட்டு வைக்க பேராசிரியர் கலாநிதி இ. பாலசுந்தரம் வெளியீட்டுரை நடாத்தினார். மாலை 6:00 pm ஆரம்பித்த நிகழ்சி ஆட்டம் பாட்டத்துடன் நள்ளிரவுவரை நீடித்தது.
வாழையடி வாழை 2011 நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு:
• கலந்து சிறப்பித்த அன்பர்களுக்கும்
• விளம்பரங்கள் தந்து உதவிய வர்த்தக வள்ளல்களுக்கும்
• கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அளித்த அறிஞர்களுக்கும்
• நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்த கலைஞர்களுக்கும்
• எமது விழாவினை விளம்பரப்படுத்திய ஊடகநிறுவனங்களுக்கும்
• இம் மலரை அழகாக பதிப்பித்து வழங்கிய Glorious Printers நிறுவனத்தினருக்கும்
• பல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும்
எமது இதயபூர்வமான நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
Posted on 23 Jan 2012 by Admin