Obituaries - மரண அறிவித்தல்



மரணஅறிவித்தல்: திரு சின்னத்தம்பி செல்வராசா


நீர்வேலி(பிறந்த இடம்)
தோற்றம் 17 APR 1934 *** மறைவு 15 MAR 2020



பாடசாலை வீதி, இராச வீதி நீர்வேலி தெற்கைப் பிறப்பிடப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா நேற்று 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், பாக்கியத்தின் அன்புக் கணவரும் விக்னேஸ்வரமூர்த்தி (இளைப்பாறிய பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றப்ப பதிவாளர்), கந்தசாமி
(இளைப்பாறிய பாடசாலை அதிபர்), ஆறுமுகதாசன் (கனடா), தவமணிதேவி
(லண்டன்), செல்வராணி (லண்டன்), இராஜேஸ்வரி (ஜெர்மனி), ஞானசௌந்தரி (நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்ததையும் கமலாதேவி, சிவமணிராணி, பாலசிங்கம், பாஸ்கரலிங்கம் (லண்டன்) காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் மற்றும் வசீகரன் ஆகியோரின் பாசமிகு மாமனும், விஜிதா (விரிவுரையாளர்- கிழக்குப் பல்கலைக்கழகம்), வனிதா (மாவட்ட நீதிமன்றம்- பருத்தித்துறை), ஜெயகாந்தன் (பொறியியலாளர்- கனடா), மேனகா (விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), சிவசங்கர் (கொக்குவில் இந்துக் கல்லூரி), குகதாசன், சிவதாசன், வாசுகி, மயூரதி (லண்டன்), நிலானி, நிசானி, நிரோசன் (லண்டன்), ஜெகதா (லண்டன்), சிறீகரன் (பொறியியலாளர்- ஜெர்மனி), நிவேதன், வினுசா (நோர்வே) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (16.03.2020) திங்கட்கிழமை நீர்வேலியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 1.00 மணிக்கு தகனக்கிரிகைக்காக பூதவுடல் நீர்வேலி சீயாக்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

+94773847200 விக்னேஸ்வரமூர்த்தி
+94776093760 கந்தசாமி

Posted on 16 Mar 2020 by Admin
Content Management Powered by CuteNews