2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் குமாரவேலு சிவராஜா (குஞ்சுக்கிளி)

அமரர் குமாரவேலு சிவராஜா (குஞ்சுக்கிளி)

இறந்த வயது 59

நீர்வேலி(பிறந்த இடம்) பிரான்ஸ்


பிறப்பு 28 JAN 1959  *** இறப்பு 02 NOV 2018



யாழ். நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், கொண்டிருந்த குமாரவேலு சிவராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எப்பொழுதும் எம்மனதில்
நிறைந்திருக்கும் ஐயாவே
அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
தேடுகிறோம் காணவில்லை

உங்கள் கண்களில் கண்ணீரை நாம் கண்டதில்லை
ஆயீனும் எம் கண்ணீரை அணைத்தீர்கள் அப்பா
உங்களின் பாசத்திற்கு இல்லையே ஆழம் ஆனால்
எம் கவலைகளைச் சொல்வதற்கு இல்லை வார்த்தைகள்

சிந்தையில் அறிவைத் தீட்டி
கரமாய் வாழ்ந்த எம் தந்தையே
வெகு தூரம் எம்மை விட்டுச் சென்றாலும்
என்றும் உங்கள் நினைவுகளோடு வாழ்வோம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

 

Posted on 03 Nov 2020 by Admin
Content Management Powered by CuteNews