யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கோப்பாய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த காசிநாதன் நாகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாதம்மா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –நெஞ்சில்
தீயாக நின்றெரியுதம்மா!
எம்மைச் சுமக்கையிலே சுகமாகச் சுமந்துவிட்டு
இன்று உன்னை உணருகையிலே
சுமையெனவிட்டுச் சென்றாயோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது!
ஓராண்டு என்ன-
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது எம் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !
எம்மைக்கடந்து செல்லும் காலமெல்லாம்
உம் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்