மரண அறிவித்தல்: திரு செல்லப்பா வைத்திலிங்கம் (எஸ். வைத்தி)



பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
தோற்றம் : 15 மே 1930 - மறைவு : 6 செப்ரெம்பர் 2018



யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா வைத்திலிங்கம் அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பெரியதம்பி, நல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, கனகசபாபதி மற்றும் அமிர்தலிங்கம்(ஓய்வு பெற்ற அஞ்சலர் உப தபால் அலுவலகம்- நீர்வேலி), சத்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜேஸ்வரி, பரமேஸ்வரி(கொழும்பு), புனிதமலர், கோணேஸ்வரன்(கைதடி முதியோர் இல்லம்) ஆகியோரின் சிறிய தந்தையும்,

பிறேமளா(கொழும்பு), இதயனி(ஆசிரியர் இடைக்காடு மகாவித்தியாலயம்), திவாகரன், தசாதரன்(லண்டன்), ரமணன் லக்சனா, குகன்(வட அமெரிக்கா), விக்கினேஸ்வரன்(ஆசிரியர் அத்தியார் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அக்சனா(கொழும்பு), அபிசாத், அபிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிவியாக்கடவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி
இல.138, மோதிரகேணியடி ஒழுங்கை,
நீர்வேலி வடக்கு,
நீர்வேலி.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

இலங்கை
செல்லிடப்பேசி: +94767199114
இலங்கை
தொலைபேசி: +94212231547

Posted on 07 Sep 2018 by Admin
Content Management Powered by CuteNews