மரண அறிவித்தல்: திரு பொன்னையா துரைராசா


மலர்வு : 28 யூன் 1950 - உதிர்வு : 8 டிசெம்பர் 2014


யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், விசுவமடு பிரமந்தனாற்றை வசிப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா துரைராசா அவர்கள் 08-12-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிக்குமார்(சின்னவாவா- பிரான்ஸ்), காலஞ்சென்ற கஜகுமார், சயந்தி, நிஷாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமனிதேவி, மல்லிகாதேவி, நவரத்தினம், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சுகி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சற்குணநாதன், சரோஜினிதேவி, சிவநாதன்(ஜெர்மனி), காலஞ்சென்றவர்களான சகுந்தலாதேவி, பாக்கியநாதன், மற்றும் பரமேஸ்வரன்(ஜெர்மனி), சிவராஜேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கஜானி, கவினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2014 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணியளவில் நீர்வேலி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி - இலங்கை
தொலைபேசி: +94212231169
மகன் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777522893
மருமகன் - பிரான்ஸ்
தொலைபேசி: +33753189940
செல்லிடப்பேசி: +33751917777

Posted on 11 Dec 2014 by Admin
Content Management Powered by CuteNews