மரண அறிவித்தல்: திருமதி பிரபாவதி கதிர்காமநாதன்

திருமதி பிரபாவதி கதிர்காமநாதன்

இறப்பு: 2014-02-15
பிறந்த இடம்: நீர்வேலி *** வாழ்ந்த இடம்: நீர்வேலி



நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பிரபாவதி கதிர்காமநாதன் (குஞ்சு) நேற்று (15.02.2014) சனிக்கிழமை இறைபதம் எய்திவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற தம்பித்துரை - பாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வியும், ஐயாத்துரை கதிர்காம நாதனின் (ஓய்வுபெற்ற ஆசிரியர் கலாசாலை ஊழியர் - கோப்பாய்) அன்பு மனைவியும், சறோஜினி தேவி, குணரட்ணம், சகுந்தலா, ஜெயரட்ணம், சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுஜாதா (லண்டன்) விஜிதா, யசோதா, யதுசன் ஆகியோரின் அன்பு தாயும் சசிப்பிரகாஷ் (லண்டன்), சுதாகரன், வரதன் ஆகியோரின் அன்புமாமியும் ஆகாஷ், அனக்சன், கிசாளி, டக்சிகா, சாலுஜா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (16.02.2014) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியை களுக்காக நீர்வேலி மாசிவன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.



தகவல் : குடும்பத்தினர் .

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் . - நீர்வேலி வடக்கு. 0778697221.

Posted on 18 Feb 2014 by Admin
Content Management Powered by CuteNews