மரண அறிவித்தல்: திருமதி மனோன்மணி நன்னித்தம்பி



இறப்பு: 2013-10-26
பிறந்த இடம்: நீர்வேலி ***** வாழ்ந்த இடம்: அளவெட்டி



நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி நன்னித்தம்பி நேற்று (26.10.2013) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா செல்லாச்சி தம்பதியரின் அன்பு மருமகளும், புவனேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற நன்னித்தம்பியின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற வரதன் மற்றும் வரதரூபன், ஜெயந்தி, வரோபன், வல்லபன் ஆகியோரின் அன்புத் தாயும், வசந்தி, தங்கேஸ்வரி, ஸ்ரீக்குமாரன், தமிழினி, கல்யாணி ஆகியோரின் மாமியும் சங்கீத்தா, நிரூசிகா, மகிழன், மகிழினி, லக்சிகா, யாலிசா, மதுர்ஷா, யாதவன், சோபிதன், கோபினா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைக்கள் இன்று (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை பி.ப. 1.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மல்லாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.(ந.வல்லபன்)

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்.(ந.வல்லபன்) - இராவத்தை, அளவெட்டி மத்தி, அளவெட்டி.

Posted on 29 Oct 2013 by Admin
Content Management Powered by CuteNews