நன்றி நவிலல்: திருமதி செல்வராணி திருச்செல்வம்
திருமதி செல்வராணி திருச்செல்வம்
வயது 74
நீர்வேலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்)
தோற்றம் 31 MAR 1949***மறைவு 06 MAY 2023


யாழ். நீர்வேலி தெற்கு பூதர்மட ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராணி திருச்செல்வம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 03-06-2023 சனிக்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்தியக் கிரியைகள் 05-06-2023 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகைதந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி: பூதர்மடம் ஒழுங்கை, நீர்வேலி தெற்கு, நீர்வேலி.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 07 Jun 2023 by Neervely Admin1
Content Management Powered by CuteNews