நன்றி நவிலல்: திரு வேலுப்பிள்ளை இரத்தினம்
திரு வேலுப்பிள்ளை இரத்தினம்
வயது 90
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்)
தோற்றம் 10 FEB 1932***மறைவு 01 JUN 2022

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலை கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், விட்டுக்கிருத்தியக்கிரியை 30-06-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
பருத்தித்துறை வீதி,
நீர்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம். 

இங்ஙனம்,
குடும்பத்தினர்

 
தொடர்புகளுக்கு

 பிரபாகரன் - மகன்
Mobile : +94778764189

Posted on 28 Jun 2022 by Neervely Admin1
Content Management Powered by CuteNews