2ம் ஆண்டு நினைவஞ்சலி: அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு (ரவி/ லம்போ)
அமரர் வரதேஷ் திருநாவுக்கரசு (ரவி/ லம்போ)
வயது 39
நீர்வேலி, Sri Lanka (பிறந்த இடம்) பிரித்தானியா, United Kingdom
பிறப்பு 11 JUL 1980***இறப்பு 26 OCT 2019

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதேஷ் திருநாவுக்கரசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றான்

தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்

எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவன் இன்று எம்மோடு இல்லை

காலன் உனைக் கவர்ந்து
கடந்தது ஈராண்டு
கண்கள் குளமாக
கலங்குகிறோம் உனையெண்ணி
உன்னோடு கூடியிருந்த காலத்தை
எண்ணி எண்ணி ஏங்குகிறோம்
மீண்டும் அது வராதே

பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்

பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்



Posted on 27 Oct 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews