நன்றி நவிலல்: திரு ஆறுமுகம் துரைசிங்கம்
வயது 84
பிறந்த இடம்: வடமராட்சி
வாழ்ந்த இடங்கள்: திருவையாறு, நீர்வேலி

யாழ். வடமராட்சி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, நீர்வேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் துரைசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 30-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 01-04-2021 வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம்,
குடும்பத்தினர்

Posted on 31 Mar 2021 by Neervely Admin1
Content Management Powered by CuteNews