Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: பூதத்தம்பி ஐயாத்துரை (PA) சுப்ரமணியம் (Engineer)

 பூதத்தம்பி ஐயாத்துரை (PA)

பூதத்தம்பி ஐயாத்துரை (PA)



கரந்தன் நீர்வேலி தெற்கினை பிறப்பிடமாகவும் கொள்ளுப்பிட்டி கொழும்பை வசிப்பிடமாகவும், பெர்த் அவுஸ்திரேலியாவினை நடப்பு வதிவிடமாகவும் கொண்ட பூதத்தம்பி ஐயாத்துரை (PA) சுப்ரமணியம் (Engineer) அவர்கள் 04-10 -2012 அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான ஐயாத்துரை செல்லாச்சி தம்பதிகளின் இளைய மகனும், காலம்சென்றவர்களான விஸ்வலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும், விஜயராணி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும், நக்கீரன்(Doctor-Australia) கவிதா (Doctor-Australia)அவர்களின் அன்புத் தந்தையும், துரைராசா (கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும், நித்தியானந்தன் (இலங்கை), சரஸ்வதி (கனடா) அவர்களின் மைத்துனரும், வசந்தி(கனடா) , ஐெயந்தி(கனடா) , சுதா(கனடா) , முரளி(கனடா) அவர்களின் சித்தப்பாவும் தேவதாம்பாள் (இலங்கை) அவர்களின் உடன்பிறவா சகோதரருமாவார்.

அன்னாரின் பூதவுடல் 09-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 06:30 மணி தொடக்கம் இரவு 09:00 மணி வரை சிப்பர் மலர்ச்சாலை, 103 நோர்மா வீதி மையாறீ மேற்கு அவுஸ்திரேலியா எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 10-10-2012 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று அதேதினம் மதியம் 1 :00 மணியளவில் ப்ரீமான்டில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
துணைவி (அவுஸ்திரேலியா): +61863643670

Posted on 08 Oct 2012 by Admin
Content Management Powered by CuteNews