Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: தம்பு நடராஜா


இறப்பு: 2011-04-03
பிறந்த இடம்: நீர்வேலி ****** வாழ்ந்த இடம்: நீர்வேலி



நீர்வேலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா 03.04.2011 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், மகேஸ்வரியின் (கண்மணி) அன்புக்கணவரும், கோகிலா, கருணா (பிரான்ஸ்), லோகேஸ்(கனடா), சர்வேஸ்வரி (கௌரி சுவிஸ்), பிருந்தா (ஆசிரியை, புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தக் கல்லூரி), சசிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீகாந்தன், குணசிங்கம், கமலக்கண்ணன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல் :குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

குடும்பத்தினர் - நீர்வேலி மத்தி, நீர்வேலி.

Posted on 06 Apr 2011 by Admin
Content Management Powered by CuteNews